Skip to content
Home » ஜனாதிபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா

ஜனாதிபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா

தமிழில் பானா காத்தாடி, , நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சமந்தா. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதையடுத்து ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் சமந்தா நடித்த சிட்டாடல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில்,   இந்திய  ஜனாதிபதி திரெளபதி முர்மு செர்பியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு சென்ற  குஷி மற்றும் சிட்டாடல் படக்குழுவினர்  ஜனாதிபதி முர்முவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் நடிகை சமந்தா, நடிகர் வருண் தவான் மற்றும் பலர் பங்கேற்றனர்.  இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!