Skip to content
Home » விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் இன்று மாலை  கோயம்பேடு கட்சி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.  இதற்காக அங்கு  குழி தோண்டும் பணி  தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  அடக்கம் செய்யப்பட உள்ள இடம்  போதுமான இட வசதி இல்லாத இடம் என்பதால்  அடக்கம் செய்யப்படும்போது பொதுமக்கள் அதில் கலந்து கொள்ள  காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது.

இதை அறிந்த தொண்டா்கள் மதியம் 1.30 மணிக்கே கட்சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்து கொண்டனர். அவர்களை  வெளியேறும்படி போலீசார்  கூறினர். அதை ஏற்க மறுத்த தொண்டர்களை போலீசார் விரட்டி விட்டனர்.  இதனால் லேசான தடியடி நடத்தப்பட்டது.

விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும்  விஐபிக்கள் உள்பட 200 பேர் மட்டுமே இதில் கலந்து கொள்ள  போலீசார் அனுமதி அட்டை  வழங்கி உள்ளனர்.   இந்த அனுமதி அட்டை 4 வண்ணங்களில் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா. மோ. அன்பரசு ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!