Skip to content
Home » அதிமுக 52ம் ஆண்டு விழா….கட்சி ஆபீஸ் விழாக்கோலம்

அதிமுக 52ம் ஆண்டு விழா….கட்சி ஆபீஸ் விழாக்கோலம்

  • by Senthil

அதிமுக 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி தொடங்கப்பட்டது.  இன்று அந்த கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள்  நடந்தது. அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வருங்கால முதல்வரே வாழ்க, பொதுச்செயலாளரே வாழ்க, தொண்டர்களின் பாதுகாவலரே வாழ்க என்பது போன்ற கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினார்கள். அதன்பின்னர் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை கழகத்தில் உள்ள அ.தி.மு.க. கொடியேற்றி வைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த விழாவில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் 52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!