Skip to content
Home » கொலைவெறி தாக்குதல்…. அதிமுக கவுன்சிலர் தலைமறைவு…

கொலைவெறி தாக்குதல்…. அதிமுக கவுன்சிலர் தலைமறைவு…

  • by Senthil

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே சட்டவிரோத ஆலைகள் மீது நடவடிக்கை கோரியவர்களை மிரட்டிய அதிமுக கவுன்சிலர் தலைமறைவானார் என கூறப்படுகிறது. குன்றத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தவர்கள் மீது தாக்கல் நடத்தப்பட்டுள்ளது. புகார் அளித்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக கவுன்சிலர் ராஜா உள்பட 2 பேர் தலைமறைவு ஆனர். தலைமறைவாக உள்ள அதிமுக கவுன்சிலர் ராஜா உள்பட 2 பேர் பிடிக்க காவல்துறை வலை வீசி தேடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!