Skip to content
Home » மயிலாடுதுறை அதிமுக தேர்தல் அலுவலகம்… ஓ.எஸ். மணியன் திறந்தார்

மயிலாடுதுறை அதிமுக தேர்தல் அலுவலகம்… ஓ.எஸ். மணியன் திறந்தார்

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் புதிதாக மயிலாடுதுறை திருஇந்தளூர் பகுதியில் திறக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற வேட்பாளர் ப.பாபு மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் , அதிமுக அமைப்பு செயலாளருமான ஓ.எஸ்.மணியன் புதிய அலுவலகத்தை ரிப்பன் பெட்டி திறந்து வைத்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

அதிமுக தேர்தல் அறிக்கையு. திமுகவின் தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார் என்ற கேள்விக்கு; அவருடைய கண்ணிலும் கருத்திலும் குறை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு நயா பைசா கூட புண்ணியம் இல்லாத தேர்தல் அறிக்கை, மிக மோசமான தேர்தல் அறிக்கை.

அதிமுகவிற்கு வாக்காளர்கள் எல்லா தரப்பினரும் ஒட்டுமொத்த ஆதரவை  தர வேண்டும்.  அதிமுகவை வெற்றிபெற வைக்க மக்கள் தயாராக உள்ளனர் மயிலாடுதுறையில் இன்னும் காங்கிரஸ் வேட்பாளரைக்கூட அறிவிக்கவில்லை. வேட்பாளரை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.  ஜெயலலிதா காலத்திலும் தனித்து நின்று வெற்றி பெற்று இருக்கிறோம்.

உதயநிதி ஸ்டாலின்  மீண்டும் ஒரு செங்கலை தூக்கிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார் .  இந்த முறை அவர் அந்த செங்கல்லால் தலையிலும் நெற்றிலும் கொட்டிக்கொள்ள வேண்டியதுதான். ரத்தம் தான் வரப்போகிறது .

பாஜக கூட்டணியினர் எம்ஜிஆர், ஜெயலலிதா  படத்தை போட்டு வாக்கு கேட்கிறார்கள்.  தமிழ்நாட்டில்  அம்மா படம் எம்ஜிஆர் படத்தை போட்டால் தான்  ஓட்டு வாங்க முடியும் என்ற எண்ணம் அனைத்து கட்சிகளும் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!