Skip to content
Home » அதிமுக போல அடிமையாக இருக்க மாட்டோம்…அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி

அதிமுக போல அடிமையாக இருக்க மாட்டோம்…அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இன்று தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆண்டவர் சன்னதியில் துவா செய்த அவர், தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் தர்காவில் 66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சின்ன கல்லறை மண்டபம், கல் மண்டபம், கால்மாட்டு மண்டபம், பெரிய கல்லறை மண்டப மராமத்து பணிகளையும் பார்வையிட்டார். ஆய்வின்போது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தர்ஹா பணிகள் அனைத்தும் ஸ்ரீராம் என்ற இந்துமத சகோதரருக்கு வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெருமிதம் தெரிவித்தார். அப்போது நாகூர் தர்காவிற்கு யானை வழங்க வேண்டும், இரண்டாவதாக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நாகூர் தர்கா ஆலோசனை குழு தலைவர் செய்யதுமுகமது கலீபாசாஹிப் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில் ; கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கிடப்பில் கிடந்த தமிழக வக்பு வாரிய சொத்துகள் பெரும்பாலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளாக அண்ணா பெரியார் அம்பேத்கர் காமராஜ் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் பாடுபட்ட சமூக நீதி வாய்ப்பில் படித்தவர் பாஜக தலைவர் அண்ணாமலை. ஒருவரை குறை சொல்லும்போது தான் எப்படி இருக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். அதேபோல பாஜக தலைவர் அண்ணாமலை தானும் தான் சார்ந்த மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஒழுங்காக உள்ளனரா? என்று முதலில் பார்க்க வேண்டும். ஊழல்வாதிகள் மோடி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தால் உத்தமர்களாக மாறுவது எப்படி என அண்ணாமலை பதில் சொல்லவேண்டும்? பல்வேறு சோதனைகளை கடந்து நாட்டு மக்களுக்கு சாதனை செய்வதே திராவிட மாடல். எந்த காலத்திலும் அச்சுறுத்தலுக்கும் சோதனைகளுக்கும் அஞ்ச மாட்டோம். அதிமுகவை போல அடிமைகளாக இல்லாமல் வீரத்தோடு சந்திப்போம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!