Skip to content
Home » சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

  • by Senthil

தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9-ம் தேதி கூட உள்ள நிலையில் பேரவைத் தலைவரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.  அதிமுக முன்னாள் அமைச்சர்கள், செங்கோட்டையன்,  விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளை மாற்றக் கோரி அவர்கள் மனு அளித்துள்ளனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவரை மாற்ற வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக உதயகுமாரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!