Skip to content
Home » அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

அரியலூர் கல்லங்குறிச்சி ரவுண்டானாவில், அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அரசு தலைமைக் கொறடா

ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இளநீர், நீர்மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…  அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். வாக்காளர்கள் நடுநிலைமையுடன் வாக்களித்து உள்ளனர். எனவே அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் பாஜகவிற்கு கண்டிப்பாக ஆதரவு தர மாட்டோம். நாடாளுமன்றத்தில் நடுநிலையுடன் செயல்படுவார்கள். பிரதமரின் மத வெறுப்பு பிரச்சாரம் குறித்த கேள்விக்கு, இது குறித்து எங்களின் பொதுச் செயலாளர் நீண்ட விளக்கத்தை தெரிவித்துள்ளார் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!