Skip to content
Home » நேபாளத்தில் விமானம் விழுந்து தீப்பிடித்தது….72 பேர் கதி என்ன?…

நேபாளத்தில் விமானம் விழுந்து தீப்பிடித்தது….72 பேர் கதி என்ன?…

  • by Senthil

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்காராவுக்கு இன்று எட்டி ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் 68 பயணிகள், 4 ஊழியர்கள் என 72 பேர் இருந்தனர். காலை 11.45 மணியளவில் பொக்காரா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்ற போது, அது விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்தவுடன் விமானம் தீப்பிடித்து எரிய துவங்கியது. உடனே தீயணைப்பு உள்ளிட்ட மீட்பு குழுவினர் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் வந்தவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!