Skip to content
Home » ஆப்கன் நிலநடுக்கம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஷித்கான் உதவி

ஆப்கன் நிலநடுக்கம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஷித்கான் உதவி

  • by Senthil

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உலகக்கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரா் ரஷித்கான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணங்களில் (ஹெரத், பரா மற்றும் பத்கிஸ்) நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுளள துயர சம்பவத்தை அறிந்து வருத்தமடைகிறேன். இதில்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் உலகக்கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் முழு சம்பளத்தையும் நன்கொடையாக வழங்குகிறேன். மேலும் விரைவில் நிதி திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட உள்ளேன்.ஈடுபட உள்ளேன்” என தெரிவித்துள்ளார். ரஷித் கானின் இந்த அறிவிப்பிற்கு ரசிகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!