திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் முன்னாள் எம்பியும் மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நடைபெற்ற கள்ள சாராய சாவுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி வரும் ,24ம் தேதி திங்கட் கிழமை காலை 10 மணி திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் எதிர்பறம் நடைபெறும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நகரக் செயலாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.