திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது அடுத்த பிறவியில் அதிமுக வின் எளிய தொண்டனாக பிறக்க வேண்டும் எனது உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் வளைய வைக்க வேண்டும் என்று நேற்று மாலை வீடியோவில் பதிவு செய்து வைத்துவிட்டு இரவு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழப்பு .
இறந்த மகேந்திரனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது . இறந்த அதிமுக தொண்டர் மகேந்திரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு திருப்பனந்தாள் வருகிறார் .
