Skip to content
Home » 3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது.

கனமழையால் தூத்துக்குடி விமான நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக   ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை – தூத்துக்குடி  இடையேயான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்தும் சென்னைக்கு இன்று விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!