Skip to content
Home » யாருடன் கூட்டணி?…. ‘துண்டு சீட்டு ‘ கருத்து கேட்பு நடத்திய வாசன்

யாருடன் கூட்டணி?…. ‘துண்டு சீட்டு ‘ கருத்து கேட்பு நடத்திய வாசன்

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நி்லையில் தமாகா மாநில செயற்குழு கூட்டம்   சென்னையில் இன்று நடந்தது.  மாநில தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  வரும் தேர்தலில்  எந்த கட்சியுடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து வாசன் தொண்டர்களிடம் கருத்து கேட்டார்.  ஒரு துண்டு சீட்டு உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது.

அதில்  யாருடன் கூட்டணி சேருவது என கேட்கப்பட்டு இருந்தது.

பாஜக+அதிமுக,

அதிமுக,

பாஜக என   மூன்று காலங்கள் அதில் போடப்பட்டிருந்தது.  இதில் எந்த கூட்டணி்யில் சேர வேண்டும் என்பதை உறுப்பினர்கள் குறிப்பிட்டு  தரும்படி கேட்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி கூட்டணி முடிவாகும் என்ற எதிர்பார்ப்பு  உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!