கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தங்குடியில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் செய்த நிலையில் 2 இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்த உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சிதம்பரம் DSP தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
