ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் போட்டியில்லை. குக்கர் சின்னம் கிடைக்காததால் தேர்தலில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். தலைமைக்கழக நிர்வாகிகளின் ஆலோசனை கருத்தில் கொண்டு இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் செந்தில்முருகன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.