Skip to content
Home » தமிழ்நாட்டில் அத்துமீறும் அமுல்…. தடுத்து நிறுத்தக்கோரி முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் அத்துமீறும் அமுல்…. தடுத்து நிறுத்தக்கோரி முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் போல, குஜராத் மாநிலத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் அமுல். இது இந்தியா முழுவதும் பிரசித்தம்.  தற்போது அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில்  வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்துக்கு  பால் கொள்முதல் செய்யும் பகுதிகளில் அமுல் நிறுவனம் புகுந்து கூடுதலாக 2 ரூபாய் கொடுத்து பால் கொள்முதல் செய்கிறது.  இதனால் ஆவின் நிறுவனம்  பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, தமிழக  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:   தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் பிரச்சினைகள் எழுகின்றன. நாட்டில் பால் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் அமுல் நிறுவன நடவடிக்கை, நுகர்வோர் மத்தியில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுக்கவேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!