Skip to content
Home » ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் மறுப்பு…… ஐகோர்ட் உத்தரவு

ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் மறுப்பு…… ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்  வாங்கியபோது மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாாி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமின் கேட்டு செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அங்கு மனு நிராகரிக்கப்பட்டதால், மதுரையில் உள்ள  ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அங்கித் திவாரி மேலும் பலரை மிரட்டி பணம்  பெற்றதாகவும், அவர்  லஞ்சம் பெற்றதில் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும்  எனவே ஜாமின் வழங்க கூடாது என்றும் தமிழக அரசின் வழக்கறிஞர்  வாதிட்டார். இதுதரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதி, இன்று   தீர்ப்பு அளிப்பதாக கூறினார். அதன்படி இன்று, அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!