Skip to content
Home » அண்ணாவின் நினைவு நாள்.. பாபநாசத்தில் அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம்…

அண்ணாவின் நினைவு நாள்.. பாபநாசத்தில் அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம்…

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாவின் 55 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் அய்யம் பேட்டையில் அமைதி ஊர்வலம் நடந்தது. இதன் முடிவில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் மேற்கு ஒன்றியச் செயலர் கோபிநாதன், பொதுக் குழு மோகன். நகர அவைத் தலைவர் முருகன், செயலர் கோவிந்த சாமி, முன்னாள் பேரூராட்சித் தலை வர் கோவிந்த ராமன், ரெகுநாதபுரம் ஊராட்சித் தலைவர் ஜெயசங்கர், சண்முகம்,பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!