Skip to content
Home » அண்ணாமலை தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறுவது ஏன்? பரபரப்பு தகவல்

அண்ணாமலை தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறுவது ஏன்? பரபரப்பு தகவல்

  • by Senthil

தேர்தல் நடத்தை விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் வாகன பிரசாரம், மைக் பிரசாரம் உள்ளிட்ட எந்த வகையிலும் வாக்காளர்கள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. , கோவை தொகுதிக்கு உட்பட்ட காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி நேற்று இரவு 10 மணிக்கு மேல்  பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். தொடர்ந்து 4-வது நாளாக தேர்தல் விதியை மீறியும், அனுமதி பெறாமலும் அவர்  நூதன முறையிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அண்ணாமலை வாகனத்தில் இருந்து இறங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தொண்டர்களுடன் சாலையில் நடக்க தொடங்கினார். அண்ணாமலையின் இத்தகைய செயலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, அண்ணாமலை உள்பட 300 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் கோவை சூலூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பியபோது, அண்ணாமலை மீதான விதிமீறல் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதி அளித்தார். இரவு 10 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரசாரம் செய்யக்கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து அண்ணாமலை  இரவு 10 மணிக்கு மேல் வேண்டும் என்றே பிரசாரம் செய்வதும், அதை தடுக்கும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து போராட்டம் நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறும்போது, அண்ணாமலை டெபாசிட்  வாங்க மாட்டார் என்பது அவருக்கே தெரிந்து விட்டது. எனவே தேர்தலை  எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என அவர் வன்முறையை தேடித்தேடி அலைகிறார்.  அவரது நடவடிக்கைகளை பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!