Skip to content
Home » அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இன்று நாகப்பட்டினம் வருகை தந்தார். பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவருக்கு நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் எல்லையில், காங்கிரஸ் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய கே.எஸ்.அழகிரி, அண்ணாமலை பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும், அண்ணாமலை உளறுவதை நிறுத்திக் கொண்டு, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி, அரசியல் கட்சி என்றில்லாமல் அண்ணாமலை செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார். மேலும் கட்சிக்கு பெருமை சேர்க்கும் எண்ணம் அற்றவர் அண்ணாமலை எனக்கூறிய கே எஸ் அழகிரி, சொத்து பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்ன

தெரியாமல் பிதற்றுவதாகவும், அதனால் பாஜக கட்சிக்கு பெருமை சேர்க்கும் உணர்வு இல்லாதவராக செயல்படுகிறார் என அவர் நக்கல் அடித்தார்.

இந்தியா தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வு.புல்வாமா தாக்குதல் என்றும், 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு காரணம் மத்திய அரசு தான் என குற்றம் சாட்டிய கே எஸ் அழகிரி, ராணுவ வீரர்களுக்கு போதிய உதவிகள் செய்யவில்லை. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!