திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் ஆகஸ்ட்.1-ம் தேதிக்குள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பிரதிக் தயாள் தெரிவித்துள்ளார்.
