Skip to content
Home » கர்நாடகா….மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்…. ஓபிஎஸ் அறிவித்தார்

கர்நாடகா….மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்…. ஓபிஎஸ் அறிவித்தார்

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது.  கர்நாடகத்தில் ஏற்கனவே புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில்  அன்பரசனை வேட்பாளராக எடப்பாடி அறிவித்தார். அதே தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் நெடுஞ்செழியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில்  இன்று மேலும் 2 தொகுதிகளில் வேட்பாளர்  அறிவிக்கப்பட்டனர். அதன்படி  கோலார் தங்கவயல் தொகுதியில்  ஆனந்தராஜூம், பெங்களூரு  காந்தி நகரில்  குமாரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!