Skip to content
Home » ராமநாதபுரத்தில் இன்றும் ஒரு ஓபிஎஸ் மனு தாக்கல்….. விடாது துரத்தும் விதி

ராமநாதபுரத்தில் இன்றும் ஒரு ஓபிஎஸ் மனு தாக்கல்….. விடாது துரத்தும் விதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் நேற்று வரை மேலும் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்றும் ஒரு ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். இதனால் முன்னாள் முதல்வரை தவிர மேலும் 6 ஓபிஎஸ்கள் மனு தாக்கல் செய்தனர்.

. கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த எம்.பன்னீர் செல்வம் என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  ஏற்கனவே வழக்குகளில் தோல்வி மேல் தோல்வியை சந்தித்துள்ள ஓபிஎஸ்சுக்கு அவரது பெயரிலேயே சோதனைகள் அணிவகுத்து வருவதால் அவர்  சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!