Skip to content
Home » 12 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக படுகொலை…. கரூரில் போலீஸ் குவிப்பு

12 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக படுகொலை…. கரூரில் போலீஸ் குவிப்பு

  • by Senthil
கடந்த 2012-ம் ஆண்டு   மதுரை சிந்தாமணி அருகே ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி  அரிவாளால் வெட்டிய 7 பேரை கொலை செய்தனர். இந்த வழக்கில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதில் முதல் குற்றவாளியான மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ரவுடி ராமர் பாண்டியன் என்ற ராமகிருஷ்ணன்(36). இவருடன் சேர்ந்து மற்றொரு குற்றவாளியான கார்த்திக்(39) ஆகிய இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்பாக ஆஜராகி வந்தனர். இந்த நிலையில், மதுரையில் பாதுகாப்பு இல்லாததால் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.
கரூரில் நீதிமன்றத்தில்  நேற்று   காலை ஆஜராகி விட்டு மதுரைக்கு  டூவீலரில்  திரும்பிக் கொண்டு இருந்தனர். அரவக்குறிச்சி அருகே டூவீலர் வந்தது.  கார்த்திக்  டூவீலரை ஓட்டினார்.  ராமர் பாண்டியன் பின்னால் அமர்ந்து இருந்தார்.
 கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சியை அடுத்த தேரப்பாடி பிரிவு சாலை அருகே ந்தபோது  காரில் வந்த மர்மக்கும்பல் டூவீலர் மீது மோதியது. இதில்  ராமர் பாண்டியன் கீழே விழுந்தார். கார்த்திக் டூவீலருடன் முட்புதரில் போய் விழுந்தார்.
ராமர் பாண்டியன்

 அப்போது காரில் வந்தவர்கள்  ராமர் பாண்டியனை சரமாரியாக வெட்டித்தள்ளி தலையை சிதைத்தனர். கார்த்திக்கையும் வெட்டினர். இதில்  ராமர் பாண்டியன் அந்த இடத்திலேயே இறந்தார்.  உடனடியாக அந்த கும்பல் காரில் தப்பியது.

தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கை மீட்டு  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.  ராமர் பாண்டியன் உடலை மீட்டு கரூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை அங்கு உடற்கூறு பரிசோதனை நடக்கிறது. எனவே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐஜி கார்த்திகேயனும் கரூரில் இன்று முகாமிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!