Skip to content
Home » அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஸ்ரீ விநாயக வெடி கடை இயங்கி வருகிறது. இந்த வெடி கடையை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல் நாயகி என்பவர் பெயரில் கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆய்வு மேற்கொண்ட பொழுது நாயகனை பிரியால் செம்புலியப்பன் பாவாடைராயன் கோயிலுக்கு அருகே அஸ்பரஸ் சீட் போட்ட வீட்டிலிருந்து இரண்டு நபர்கள் வருவது கண்டு சந்தேகமடைந்த நிலையில் அவர்களை விசாரித்த பொழுது அந்த ஆஸ்பரஸ் சீட் வீட்டில் 92 மூட்டைகள் வெடிபொருட்களும் மேலும் மூலப் பொருட்களும் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து

வருவாய் ஆய்வாளர் சிவனேசன் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் அந்த வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் தா.பழூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தா.பழூர் காவல்துறையினர் ஆறுமுகம் என்பவரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!