அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழகம் சார்பில், அரியலூர் மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில், ஒற்றுமை தொடரில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக அமைதி ஊர்வலமாக
வந்து அரியலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக அரியலூர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழகம் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.