இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைகளின் கட்டட கட்டுமான பணியினையும், ரூ.1.51 இலட்சம் மதிப்பீட்டில் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ள கட்டட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமான பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், கட்டுமான பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து விளந்தை
ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.12.3 இலட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் நியாய விலைக்கடை கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து நடைபெறும் பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், விளந்தை ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.6.1 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை பணியினை பார்வையிட்டு சாலையின் தரம்குறித்து ஆய்வு செய்து சாலையை முறையாக பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஆண்டிமடம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.5.08 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கதிரடிக்கும் களம் அமைத்தல் பணியினை பார்வையிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள விவசாய விலைபொருட்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து கதிரடிக்குளம் களத்தினை முறையாக விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஆண்டிமடம் ஊராட்சி, பட்டணங்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.5.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மகளிர் கழிவறை அமைத்தல் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர்(பொ) முருகண்ணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிந்தனர்.