Skip to content
Home » அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த

பக்தர்கள் அக்னி மற்றும் பூங்கரகத்துடன் வலம் வந்து, தயார் நிலையில் இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து, தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர். பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!