Skip to content
Home » அரியலூர்…. 7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

அரியலூர்…. 7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அபிமணி (வயது 22). இவர் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உடற்கல்வி ஆசிரியரான ஹெரால்டு சகாயராஜ் (52) என்பவரிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து, ஹெரால்டு சகாயராஜ், அந்த மாணவியை விசாரிப்பது போல் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவரை பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சோர்வாக காணப்பட்ட சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதனைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம்  முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் இது குறித்து விசாரிக்க தாமதப்படுத்தியதால் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பு எண் 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் வந்து விசாரணை செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில்ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து அபிமணி மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ்ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!