Skip to content
Home » அரியலூர்…. கனரக வாகனம் மோதி நாய் பலி…. அடிக்கடி விபத்து…பொதுமக்கள் போராட்டம்…

அரியலூர்…. கனரக வாகனம் மோதி நாய் பலி…. அடிக்கடி விபத்து…பொதுமக்கள் போராட்டம்…

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விதிமுறைகளை மீறி இரவு பகல் பாராமல் 500-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் ஏரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் காரைக்குறிச்சி சாலையில் மண் ஏற்றி சென்ற லாரி நாய் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி நாய் பலியானது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டனர். பின்னர் அவ்வழியே வந்த 500-க்கும் மேற்பட்ட லாரிகளை

இயக்க விடாமல் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் காரைக்குறிச்சி-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இது பற்றி தகவல் அறிந்து வந்த தா.பழூர் போலிசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நேரங்களில் மற்றும் இரவு பகல் பாராமல் கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுத்துவதாகவும், இதனால் மனித உயிர்ச்சேதம் மற்றும் தொடர்ந்து கால்நடைகள் அதிகம் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இதற்கு உரிய தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார், தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!