Skip to content
Home » அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 436 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து

மாவட்ட ஆட்சித்தலைவரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ரூபாய்.1,38,000/- மதிப்பீட்டிலும் மற்றும் தேசிய அறக்கட்டளை சட்டம் 1999-ன் படி, நான்கு வகையான மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோர், ஆட்டிசம் குறைப்பாட்டாள் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்கு வாதம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர் ஆகியோர்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலர் நியமனம் உள்ளுர் அளவிளான குழுமத்தால் 06 நபர்களுக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!