Skip to content
Home » அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற நான்கு கால வேள்வி பூஜைகள் முடிவற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலைச் சுற்றி வலம்

வந்தது. இதனையடுத்து அருள்மிகு விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் மகா மாரியம்மன் ஆகிய கோவில் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!