Skip to content
Home » அரியலூர் அருகே….. மருத்துவம் பார்த்த……மருந்துகடைக்காரர் கைது….

அரியலூர் அருகே….. மருத்துவம் பார்த்த……மருந்துகடைக்காரர் கைது….

அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் அதே பகுதியில் ஹரிஷ் என்ற பெயரில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் அலோபதி மருத்துவம் படிக்காமல், அப்பகுதி மக்களுக்கு அலோபதி மருத்துவம் செய்வதாக, மாவட்ட மருத்துவ துறை துணை இயக்குநர் மாரிமுத்துவிற்கு புகார்  வந்தது. புகாரின் பேரில் வீரபாண்டியனின் மருந்து கடையில் மாவட்ட மருத்துவத்துறை துணை இயக்குநர் மாரிமுத்து ஆய்வு செய்ததார். அப்போது அலோபதி மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்தது கண்டறியப்பட்டது. இது குறித்து தூத்தூர் காவல் நிலையத்தில் மருத்துவத்துறை துணை இயக்குனர் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து வீரபாண்டியனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!