Skip to content
Home » அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

அரியலூர்-தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் கடந்த ஒரு வார காலமாக இரண்டு மற்றும் நான்காவது வார்டுகளில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரானது கிடைக்காமல் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்து இடத்திற்கு வந்த தா.பழூர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!