Skip to content
Home » அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..

அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் தெற்குப்பட்டியில் அமைந்துள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் கடந்த சில வாரங்களாக பள்ளியில் உள்ள கட்டிடங்களில் ஒரு சில இடங்களில் மேற்கூரை பூச்சிகள் அவ்வப்போது விழுந்து வரும் நிலை இருந்து வந்துள்ளது தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பள்ளியின் மேற்கூறைகள் இடிந்து

விழுவதும், சுவர்களில் இருந்து நீர்க்கசிவு ஏற்படுகிறது இதனால் மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து சென்றுள்ளனர் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக கட்டிடங்களில் நீர் கசிவு அதிக அளவில் காணப்பட்டது இதனால் கட்டிட சுவர்கள் பலமிழந்து விழுந்து விடுமோ என அஞ்சிய மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் இதற்கு மேலும் இக் கட்டிடத்தில் செயல்படும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப இயலாது எனக் கூறி அரசு பள்ளியில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து சென்றனர்

அப்பொழுது இக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பள்ளி வளாகத்தில் செய்து கொடுத்தால் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!