Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்.. சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞருக்கு ஆயுள் சிறை..

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி செங்கரான்டித் தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் ராஜபாண்டியன் (26). கடந்த 13.2.2022 அன்று இவா், 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், அரியலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுனா். பின்னா், ராஜபாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எஸ்.மணிமேகலை, குற்றவாளி ராஜபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து ராஜபாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ம.ராஜா ஆஜரானாா்.

error: Content is protected !!