Skip to content
Home » அரியலூர் அருகே விசிக- பாஜக பயங்கர மோதல்….வாக்குப்பதிவு நிறுத்தம்

அரியலூர் அருகே விசிக- பாஜக பயங்கர மோதல்….வாக்குப்பதிவு நிறுத்தம்

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி மையம் அருகே விசிக மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு மண்டை உடைப்பு: இச்சம்பவம் காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக 2 மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி வந்தார்.

இந்த வாக்குச்சாவடி மையம் அருகே உள்ள நரசிங்கபாளையம் வாக்குச்சாவடி மையம் ஏற்கனவே பதற்றமான வாக்கு சாவடி மையம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு போதுமான போலீசார் இல்லாததன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  அதிகாரிகளன்  அலட்சியத்தால்  இங்க மோதல் ஏற்பட்டதாக  காரணமே என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!