Skip to content

அரியலூர்- பெண்கள் காலிகுடங்களுடன் ஊ.ஒ.அலுவலகம் முற்றுகை…

  • by Authour
அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகரில் சுமார் 1500 மக்கள் வசித்து வருகின்றனர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யாமல் குடிநீர் வழங்குவதால் நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இன்று செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் முற்றுகையிட்டனர். பெண்கள் காலி குடங்களுடன் வருகை தந்து அலுவலக வாசலில் நின்று கோசமிட்டனர். பின்னர் அரியலூரில் இருந்து பொன்பரப்பி செல்லும் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நக்கம்பட்டி கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் நகரில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும். கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயா உள்ளதால் கழிவுநீர் வாய்க்காலை சரி செய்ய வேண்டும். சுடுகாட்டில் பொதுமக்கள் வசதிக்காக மினிடேங்க் அமைத்து தண்ணீர் ஏற்றி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், தங்கள் மரியாதை கைவிட்டு கலைந்து சென்றனர்.
error: Content is protected !!