Skip to content
Home » தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

  • by Senthil

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை  திமுகவினர் இன்று விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி  திருச்சி ஒத்தக்கடை, மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என் அருண் நேரு  வேட்டி,  சட்டை, புடவைகளை வழங்கினார்.

அத்துடன்  நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கும்  காலை உணவும் வழங்கப்பட்டது. சுமார் 6 ஆயிரம் பேர் இந்த நலத்திட்ட உதவிகளை பெற்றனர்.   நிகழ்ச்சியில் திருச்சி மேயர் அன்பழகன், பகுதி செயலாளர்  மோகன்தாஸ்,  கவுன்சிலர் ராம்தாஸ்  மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாககலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!