Skip to content
Home » பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

சென்னையில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், 2,500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆருத்ரா நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர், அவரது மனைவி உஷா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே போலீசார் விசாரணையை துவங்கியதையடுத்து ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் துபாய் நாட்டிற்கு தப்பிச்சென்று அங்கு தலைமறைவாக இருந்து வந்தனர். மேலும் துபாயில் சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில் ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் ராஜசேகர்
ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் ராஜசேகர்
இந்நிலையில் வெளிநாடுகளில் பதுங்கி உள்ள குற்றவாளிகளை கைது செய்ய பயன்படுத்தும் சிறப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை தமிழ்நாடு காவல்துறை பயன்படுத்தியது. இது தொடர்பாக துபாய் போலீசாரிடம் ராஜசேகரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் ராஜசேகர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!