Skip to content
Home » அஸ்வின் சுழலில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்… இன்னிங்ஸ், 141ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…

அஸ்வின் சுழலில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்… இன்னிங்ஸ், 141ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்றது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடினர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில் 150 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்தும், ஜெய்வாலும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் சதமடித்தனர். ரோகித் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி, ஜெய்ஸ்வால் இருவரும் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த ஜெய்ஸ்வால் 171 ரன்கள் எடுத்து அவுட்டானார். கோலி 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அத்துடன் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றது.  இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் அந்த அணி தொடக்கத்திலேயே தடுமாறி வந்தநிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிரெய்க் பிராத்வைட் (7), சந்தர்பால்(7) ரேமன் ரைபர் (11), பிளாக்வுட் (5), ஜோசுவா டா சில்வா(13) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை. அனைத்து பேட்ஸ்மேன்களும் வந்த சிறிது நேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50.3 ஓவர்களை எதிர்கொண்டு130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால், இந்த போட்டி மூன்றே நாளில் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!