Skip to content
Home » மணப்பாறை….. மனமகிழ் மன்ற மேலாளர் மீது தாக்குதல்… 4பேருக்கு வலை

மணப்பாறை….. மனமகிழ் மன்ற மேலாளர் மீது தாக்குதல்… 4பேருக்கு வலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை செவலூர் பிரிவு ரோட்டில் உள்ள  இமயம் மனமகிழ் மன்றத்தின் மேலாளராக  இருப்பவர் அரவிந்த்(41). இவர் நேற்று மாலை  மனமகிழ் மன்றத்தை மூடிவிட்டு உள்ளே அமர்ந்திருந்தார். அப்போது  அந்த பகுதியை சேர்ந்த வினோத்குமார்(30), அப்துல் முனாப்(35), இஸ்மாயில்(33), ஈசை(35) ஆகிய 4 பேரும் மனமகிழ் மன்றத்தின் கதவை தட்டினர்.

அரவிவந்த் வந்து கதவை திறந்தார். அப்போது உள்ளே புகுந்த 4 பேரும் தங்களுக்கு மது வேண்டும் என கேட்டு உள்ளனர். அதற்கு அவர் இங்கு மது இல்லை என்று கூறினார். ஆனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அரவிந்தை தாக்கி விட்டு ஓடிவிட்டனர். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!