மதுரை: மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நகை பறிக்க முயன்றபோது சுதாரித்துக் கொண்ட கலைச்செல்வி கொள்ளையர்களை தடுத்துள்ளார். கோட்டநத்தம்பட்டியில் வீட்டிலிருந்த கலைச்செல்வியிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகை பறிக்க முயற்சி செய்துள்ளனர். பெண்ணை கொலை செய்ய முயன்ற கொள்ளையர்கள் இருவரை மக்கள் பிடித்து வீட்டிற்குள் அடைத்து வைத்தனர்.
