Skip to content
Home » 6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது

6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது

  • by Senthil

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் பக்கிரிசாமியை  போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பக்கிரிசாமி தி.மு.க.வில் இருந்து  நிரந்தரமாக  டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பக்கிரிசாமி செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர்  துரை முருகன் தெரிவித்துள்ளார்.

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி இது குறத்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த செய்தியை நான் கேள்பிபட்டதும்  பக்கிரிசாமியை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கினோம். உடனடியாக அவர் மீது  நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மனித குலத்திற்கே அவமானமானவர்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!