Skip to content
Home » ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது…..சூரத் செசன்ஸ் கோர்ட்…

ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது…..சூரத் செசன்ஸ் கோர்ட்…

  • by Senthil

பிரதமர் மோடி குறித்து  அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ராகுலின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில்  தண்டனைக்கு  அப்பீல் செய்ய 1 மாத காலம் கோர்ட் அவகாசம் வழங்கியது. அதைத்தொடர்ந்து இன்று  தனது தங்கை பிரியங்காவுடன், சூரத் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள செசன்ஸ் கோர்ட்டில் தண்டனையை  எதிர்த்து அப்பீல் செய்தார்.  மனுவை ஏற்றுக்கொண்ட   செசன்சு நீதிபதி  ராகுல் காந்திக்கு  ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் வழங்கினார்.

மேல்முறையீட்டு மனு விசாரணையை மே 3-ம் தேதிக்கு சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!