Skip to content
Home » பேச்சுபோட்டி…. முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவி மஞ்சு வெற்றி

பேச்சுபோட்டி…. முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவி மஞ்சு வெற்றி

  • by Senthil

தென்காசி மாவட்டம்  மேட்டூரில் உள்ள புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,   ஆசிரியர் தினம் மற்றும் சர்வதேச இலக்கிய தினத்தை முன்னிட்டு 7.9.2023 நாளன்று Luna’s Hue Intercollegiate 2023 என்ற தலைப்பில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில்  முக்கூடல்,  பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,  மாணவிகள் கட்டுரை போட்டி, வசனம் எழுதும் போட்டி, பானையில் ஓவியம் வரையும் போட்டி, பேச்சு போட்டி, குழு நடனம், குழு பாடல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் பேச்சு போட்டியில் கலந்து கொண்ட முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி  எஸ். மஞ்சு இரண்டாம் பரிசு பெற்றார். பரிசு பெற்ற மாணவி மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளை கல்லூரி செயலாளர் பாலகன் ஆறுமுகச்சாமி , கல்லூரி முதல்வர் முனைவர்  ஆர். கிருஷ்ணவேணி , பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பிற மாணவிகள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!