Skip to content

பெங்களூரு ஏர்போட்டில் வேலை…. தஞ்சை வாலிபரிடம் ரூ.1.84 லட்சம் மோசடி…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி இளைஞர் வேலை தேடி வந்துள்ளார். இவரது சமூக வலைதளத்தில் வந்த தகவல் மூலம் ஒரு பெண்ணின் தொடர்பு கிடைத்தது. தொடர்ந்து, இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது, அப்பெண்ணிடம் வேலை தேடிக் கொண்டிருப்பதாக கும்பகோணம் இளைஞர் தெரிவித்துள்ளார். அதற்கு அப்பெண், பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்துதான் வேலையில் சேர்ந்ததாகவும், உங்களுக்கும் வேலை வேண்டுமானால் பணம் கொடுத்தால் வாங்கி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய அந்த இளைஞர் அப்பெண் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு சில தவணைகளில் ரூ. 1.84 லட்சத்தை அனுப்பி உள்ளார். தொடர்ந்து அந்த இளைஞருக்கு விமான நிலையத்தில் பணியில் சேர போலி அனுமதி கடிதம் மெயிலில் வந்தது. ஆனால் அது போலி என்று தெரியாத அந்த இளைஞர் அனுமதி கடிதத்தின் நகலை எடுத்துக் கொண்டு பெங்களூரு விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அது போலி கடிதம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்துதான் கும்பகோணம் இளைஞருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து தஞ்சாவூருக்கு திரும்பிய அவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!