Skip to content
Home » பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத, பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து, திமுக கழக நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும்; நாகையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் பேச்சு;

நாகப்பட்டினத்தில் இன்று வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நாகை நகர திமுக கழகம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கௌதமன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத, பாஜகவின் மாய

பிம்பத்தை உடைத்து, திமுக கழக நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும் என்றும், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் வாக்காளர்களின் இல்லம் தோறும் சென்று திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகை தொகுதி வெற்றி பெற திமுக கழக வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!