Skip to content
Home » அனுமதியின்றி கொடிகம்பம் நட முயற்சி… திருச்சியில் பாஜகவினர் கைது

அனுமதியின்றி கொடிகம்பம் நட முயற்சி… திருச்சியில் பாஜகவினர் கைது

  • by Senthil

சென்னையில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற கடிதம் இணைக்கப்படவில் லை எனக்கூறி போலீசார்  கொடிக்கம்பம் நட அனுமதி மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து நவம்பர் 1(இன்று) முதல்  தமிழகம் முழுவதும் நாள்தோறும் 100 கொடிக்கம்பங்கள் 100 நாட்களுக்கு நடப்படும் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டது, இதற்கு காவல்துறையினர் அனுமதி  வழங்கப்படவில்லை. இந்நிலையில் திருச்சி

மாவட்டத்தில்  இன்று பல்வேறு இடங்களில் பாஜக கொடியை  நடுவதற்கு  பாஜகவினர்  பெயரளவிற்கு ஏற்பாடு செய்து ஆங்காங்கே  சிலர் திரண்டிருந்தனர்.

திருச்சி பாலக்கரை பீமநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக கொடியை  நடுவதற்காக  வந்த பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.  அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீசார் கைது செய்தனர்.  பாஜகவினரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பாஜகவினர் கோஷத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!